திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டு மேல கிருஷ்ணன் கோவில் தெருவில் பொது குடிநீர் குழாய் தொட்டி உள்ளது. இது மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாய் தொட்டி அருகே பொது சாக்கடை உள்ளது. அதில் சாக்கடை நீர் தேங்கி அதிலிருந்து நீர் வெளியேறி குடிநீர் குழாய் தொட்டியில் வழிகிறது. இதனால் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது.
மேலும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுக்குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொற்று நோய் அதிகரிக்கும் முன் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments