Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை எனப்படுகிறது. இந்த நிலையில், இன்று (25.04.2024) நிரந்தர உண்டியல்களில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், 67லட்சத்து 80ஆயிரத்து 962 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 897 கிராம் தங்கம், 2 கிலோ 527 கிராம் வெள்ளி, 59 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 959 அயல்நாட்டு நாணயங்கள் இருந்தன. 

உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்

1. அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன்.

2. சி.கல்யாணி, இணை ஆணையர் / செயல் அலுவலர்.

3. பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

4. இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

5. சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர்.

6. தி.அனிதா, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு, தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி

7. ம.லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி

8. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்

9. நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்

10. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.

11. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள். (17.04.2024) 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *