திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் இணைந்து பல்வேறு விவசாயம் சார்ந்த களப்பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் கிராமத்தில் Smai ஆர்கானிக்ஸ்குடன் இணைந்து விவசாயிகளுக்கு திருந்திய பயிர் சாகுபடி முறையில் 5 அடி கம்பு நடவு செய்து செயல் முறை விளக்கம் அளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் முசிறி எம். ஐ. டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் தி.அபர்னா, மூ.அபிநயா, சே.அபிராமி, ரா.அஃப்ரின் பானு, ச.க.அக்ஷயா, ச.அனு, ந.அனுஶ்ரீ, ம.ஆரோக்கிய ப்ரனிதா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments