Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நண்பர்கள் சேர்ந்து நடுரோட்டில் இளைஞர் கொலை

திருச்சி தியாகி அருணாசலம் சிலை அருகில் உள்ள ஆர் ஆர் சபாரோடு சந்திப்பில் திருச்சி கருவாட்டு பேட்டை சேர்ந்த பரணி குமார் (26)என்பவரை மாதேஷ் அவரது நண்பர் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த முகமது தவ்பிக் என்கின்ற டோலு சேர்ந்துகல் மற்றும் கூர்மையான ஆயுதத்தால் பின்புறத் தலை, கழுத்து இடதுபுற புருவம், வலது புற மணிக்கட்டு ,ஆகிய இடங்களில் தாக்கி கொன்றுள்ளனர்.

இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இறந்து போன பரணி குமார் கடந்த ஐந்து வருடங்களாக ஜோதி (45) என்பவரிடம் தகாத உறவில் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்றிரவு குடிபோதையில் பரணி குமாருக்கும், ஜோதிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது மாதேஷ் நண்பர் டோலு என்கின்ற முகமது ரபிக் இருவரும் சேர்ந்து சேர்ந்து கொலை செய்துள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்து போன பரணி குமார் மற்றும் கொலை செய்த இருவருக்கும் கோட்டை குற்றப்பிரிவில் குற்ற செயல்களில் ஈடுபட்டதற்கு வழக்குகள் உள்ளது. மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட மாதேஷ் மற்றும் முகமது தவ்பிக் என்ற டோலு இருவரையும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக 9ம் தேதி விசாரணையில் வைத்து விசாரணை செய்துவிட்டு இரவு 21:30 மணி அளவில் வெளியே அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை குறித்து ஸ்ரீரங்கம் காவல் சரக உதவி ஆணையர் செல்வி நிவேதா லட்சுமி, உதவி ஆணையர் மாநகர குற்றப்பிரிவு முருகவேல் விசாரணை செய்து வருகின்றார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *