Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

81 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

 திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி, அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்த சீனிவாசன் த/பெ.சண்முகம்பிள்ளை என்பவரிடமிருந்து 81 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 81 கிலோ புகையிலை பொருட்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபரையும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.சண்முகம், அன்புச்செல்வன், கந்தவேல் மற்றும் மகாதேவன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்படு கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *