சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு பயணி மற்றும் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்பொழுது இரும்பு வெட்டும் இயந்திரத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே அவற்றைப் பிரித்து பார்த்த அதிகாரிகள் 92 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 299 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments