அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (24). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி அரியலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அதேபோல் புள்ளம்பாடி அருகே கீழரசூரில் கடலூர் மாவட்டம் முஸ்ணம் தாலுகா நடுத் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (27).
தனது லாரியை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த தமிழ்ச்செல்வன் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments