Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மேஜர் சரவணனின் 25வது ஆண்டு நினைவு நாள் – ஆட்சியர், மேயர் மரியாதை

திருச்சியில் மேஜர் சரவணனின் 25வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெஸ்டரி பள்ளி அருகில் உள்ள அவரது நினைவுத்துனிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் கருணாநிதி பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ் கமால் முஸ்தபா கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி மற்றும் கழக நிர்வாகிகள்c செ வந்தி லிங்கம் கிராப்பட்டி செல்வம், கலைச்செல்வி புஷ்பராஜ் ராமதாஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா வழக்கறிஞர்கள் கவியரசன் அந்தோணி, முத்து பழனி , தர்மசேகர்,கவிதா, பாலமுருகன், பீம நகர் சதீஷ் உள்ளிட்ட பொதுமக்கள் ராணுவத்தினர் மரியாதை செய்தனர்.

திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி பள்ளி அருகில் உள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் இருவரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *