திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா சோபனாபுரம் காஞ்சேரி மலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (39). இவர் தனது மோட்டார் பைக்கில் துறையூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் லாரி டிரைவர் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா மேலூர் செட்டியார் தோப்பு மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் திருச்சியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி துறையூர் சாலையில் உள்ள பெரமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments