Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜல்லிக்கட்டு டோக்கன் தகவல் – வாயில் வெட்டிய ஐவர்

No image available

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் நெய் குணம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் பிரபு (41). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டுபோட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு டோக்கன் வழங்குவது சம்பந்தமாக வாட்ஸாப்பில் தகவல் போட்டுள்ளார். இது சம்பந்தமாக காட்டூர் மஞ்சத்தடியில் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு காட்டூர் பாப்பா குறிச்சி ரோட்டில் பிரபு பைக்கில் வந்து கொண்டிருந்த பொழுது கார்த்திக் (30) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து பிரபுவை வழிமறித்து வலது தோள்பட்டை வாய் உள்ளிட்ட பகுதியில் சாரா மாறியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அப்பகுதியில் சென்றவர்கள் பிரபு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்சில் பிரபுவை ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததோடு கார்த்திகை கைது செய்து மேலும் அவரது நண்பர்கள் நான்கு பேரை தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *