Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது- ஒருவர் தப்பியோட்டம்!

திருச்சி மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூவரை உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றபோது ஜெயராம்(39), கனகராஜ்(40) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். மேலும் தப்பியோடிய முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து மது விற்பனை செய்த 2000 ரூபாய், கைப்பேசி மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement

மேலும் குற்றவாளிகள் மீது மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் தப்பியோடிய முருகனையும் தேடி வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *