Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரங்கநாதருக்கும்,

அதனைத் தொடர்ந்து தாயாருக்கும் நடத்தப்படும். கடந்த 11-ம் தேதியன்று ரெங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மிகவும் விஷேசமான இன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகத்திற்காக அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட திருமஞ்சனம் (புனிதநீர்) எடுத்து வரப்பட்டது.

தங்கக்குடத்தில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது தங்கக்குடத்தை வைத்தும், வெள்ளிக் குடங்களில் நிரப்பபட்ட புனிதநீர் கோவில் அர்ச்சகர்களால் சுமந்துவரப்பட்டு, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் கோவில் வரை ஊர்வலமாக தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் தொடர்ந்து தாயாருக்கு சாற்றப்பட்டிருக்கும் வஸ்திரங்களை களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு மறுபடியும் புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது. காவிரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

வழி நெடுங்கிலும் பக்தர்கள் நின்று வணங்கி வழிபட்டனர். மூலவர் நம்பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு சாற்றப்படுவதால் 48 நாட்களுக்கு திருவடி சேவை கிடையாது. பக்தர்கள் பெருமாளின் முகத்தை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *