Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிரபல பள்ளியில் இறந்த விடுதி சமையல் உதவியாளர் – போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஒட்டக்கொடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன் (61). இவர் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் விடுதி சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார்.

இன்று காலையில் படுத்திருந்தவரை சக தொழிலாளர்கள் எழுப்பி பார்த்த பொழுது அவர் இறந்து போய் இருப்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக உடனடியாக திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் சுந்தரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *