Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை மறுநாள் (09.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி 110/11 கி.வோ துணை மின் நிலையத்தில் வருகின்ற (09.07.2024) செவ்வாய்க்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி,

செவந்ததாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரபட்டி, வெங்கட்நாயகன்பட்டி அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி, கல்லுபட்டி, A. பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளகாம்பட்டி,சிங்கிலிப்பட்டி, M.இடையப்பட்டி, பழையபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும்பகிர்மான கழகம், இயக்கலும் /காத்தலும், மணப்பாறை செயற்பொறியாளர் பொறிஞர்.இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி 33/11க.வோ மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து (09.07.2024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு.வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரி சாலை, சிந்தாமணி,

சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு, தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

110/33/11கி.வோ கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு,நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, டாக்கர் ரோடு, P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம்,

திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், ஆகிய பகுதிகளில் (09.07.2024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இயக்கலும் காத்தலும், நகரியம், திருச்சி செயற்பொறியாளர் பொறிஞர் K.A.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *