Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் முசிறி அனைத்தும் மகளிர் காவல் உதவி ஆய்வாளர் கவிதா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குழந்தைகள் எதிரான குற்ற சம்பவ நடைபெற்றால் அதை தயங்காமல் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும், இளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறித்து அதை மறைக்காமல் பெற்றோர்கள் அல்லது காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் பூபாலன் உள்பட ஆசிரியர் பெருமக்கள் மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *