Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்பு வீடுகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதிப் பிரிவின் கீழ் வரகனேரி (பால்பண்ணை அருகில்) உயர் வருவாய் பிரிவில் 14 மாடிகள் மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்டு கட்டப்பட்ட 56 வீடுகளில் 38 வீடுகள் ரூ.78.00 இலட்சங்கள் முதல் ரூ.81.00 இலட்சங்கள் வரை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் செயற் பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதிப் பிரிவு, இராஜாராம் சாலை, கே.கே.நகர், திருச்சி-21 என்ற முகவரியிலும், கைபேசி .9940498959 9443833348 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *