திருச்சி மாவட்டம் திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டு ஏழை, எளிய மக்களை வேதனைக்கு ஆளாக்கத் துடிக்கும் திமுக அரசை கண்டித்தும்,
இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி அல்லித்துறை அண்ணா திடலில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி மாநகர் ஆகியவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ, அதிமுக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, அண்ணாவி, பூனாட்சி, நல்லுசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னசாமி, பாலன், பரமேஸ்வரி முருகன், சந்திரசேகர்,
மல்லிகா சின்னசாமி, இந்திராகாந்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.சி.பரமசிவம், சுப்பு (எ)சுப்பிரமணியன் மற்றும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments