Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் (2021-22) ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மாகாந்தி, ஜவகர்லால்நேரு. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பின் படி (2024-2025) ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு (06.08.2024) ஆம் நாளன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு (07.08.2024) ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக திருச்சிராப்பள்ளி புனிதவளனார் கல்லூரி மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 10:00 மணிக்கும். கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2:00 மணிக்கும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை (ஏப்ரல் -14) முன்னிட்டு (06.08.2024) ஆம் நாளன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு 1.) இந்தியாவின் விடிவெள்ளி அம்பேத்கார், 2.) சமூகநீதி அம்பேத்கர், 3.) பூனாஉடன்படிக்கை, 4.) அம்பேத்கரின் வறுமை எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு “1.) நூலகமும் அம்பேத்கரும், 2) தொழிலாளர் நலனில் அம்பேத்கர், 3. ) பொருளாதாரமும் அம்பேத்கரும், 4) சமத்துவமும் அம்பேத்கரும்” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை (ஜுன் – 3) முன்னிட்டு (07.08.2024) ஆம் நாளன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு “1).தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டில் முத்தமிழிறிஞர் கலைஞரின் பணிகள், 2) முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழகம், 3) நெஞ்சுக்கு நீதி 4) முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழும் எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு “1.)சட்டமன்ற வரலாற்று நாயகர் கலைஞர், 2) திரைத்துறையில் புதுமை படைத்தகலைஞர், 3)மாற்றுத்திறனாளிகள் நலம் காத்த கலைஞர், 4) குறளோவியம் படைத்த குரலோவியமே” தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். எனும்

மேலும், பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக்கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப் பெற வேண்டும். அதேபோன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-. மூன்றாம் பரிசு ரூ.2000/-.என்றவகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக் குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/-, என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும்.

இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *