Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் ஏலூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவர் பல்வேறு இடங்களில் நடைபெறும் தினசரி, வார சந்தையில் மளிகை சாமான் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சந்தையில் வியாபாரம் முடித்து வீடு திரும்பியவர் இரவு வீட்டின் மேல்மாடியில் சென்று படுத்து உறங்கி உள்ளனர். கீழ் வீடு பூட்டப்பட்டிருந்தது. இன்று காலை 5 மணிக்கு எழுந்து வந்து கீழ் வீட்டை பார்த்தபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கராசு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

வீட்டிலிருந்த இரண்டு பீரோக்கள் நெம்பி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 43பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 1 லட்சத்தி 50 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராசு காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தடவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மெயின் ரோட்டில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 43 பவுன் தங்க நகைகள் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *