Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வயநாடு குழந்தைகளுக்கு அன்பு கரம் நீட்டிய நல்உள்ளங்களுக்கு நன்றி

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெற்றோர் சொந்த பந்தங்களை இழந்து தவிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் உங்களின் பேராதரவுடன் திருச்சி விஷன் களம் இறங்கியது.

ஏராளமான நல்லுள்ளங்கள் உதவிகளை தொடர்ந்து செய்தனர். இந்த உதவியால் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு புதியதொரு வாழ்க்கையை தொடங்கும் நிலையில் மனதளவில் உற்சாகமடைய உதவியாக அமைந்துள்ளது. வயநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு உதவிக்கரம் கேட்டு திருச்சி விஷன் கேட்டுக்கொண்டதற்கினங்க திருச்சியில் உள்ள நல்ல உள்ளங்கள் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 8ம் அனைத்து பொருட்களையும் லாரிகள் மூலம் ஏற்றி வயநாட்டிற்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் வழியனுப்பி வைத்தார். 

பின்னர் திருச்சி விஷன் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் வயநாட்டில் மீனங்காடு பகுதியில் உள்ள DCPO அலுவலகத்தில் குழந்தைகளுக்கான நிவாரண பொருட்கள் அனைத்தும் நேரடியாக அலுவலரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான பொருட்கள் கல்பெட்டா பகுதியில் இரண்டு இடங்களில் நேரடியாக பாதுகாப்பான இடங்களில் வழங்கப்பட்டது. 

திருச்சி விஷன் வேண்டுகோளை ஏற்று சிறிதும் தாமதிக்காமல் நிவாரண பொருட்களை வழங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், திருச்சி மக்களுக்கும் திருச்சி விஷன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *