Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சந்தனம் குங்குமம் பன்னீருடன் மாணவர்களை வரவேற்ற பள்ளி!!

Advertisement

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வை எதிர்கொண்டு தற்போது வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் பகுதிகளில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னர் தங்கள் அதிகார வரம்பில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன. பல மாநில அரசுகள் 2021 ஜனவரியில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருந்தாலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உயர் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று 10ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. திருச்சி மேலப்புதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் (செயிண்ட் ஜோசப்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி) பள்ளிக்கு வருகை தரும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு சந்தனம், குங்குமம், ரோஜாவுடன் பன்னீர் தெளித்து பள்ளி தலைமையாசிரியர் லூர்து மேரி தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் இன்முகத்துடன் மாணவிகளை பள்ளிக்கு வரவேற்றனர்.

Advertisement

கிட்டத்திட்ட 9 மாதங்களுக்கு பிறகு வரும் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் வருகை புரியும் வேளையில் சந்தனம், குங்குமம், பன்னீர் தெளித்து வரவேற்றது மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *