Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே கொலையை துப்புத் துலக்கிய காவல்துறை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். இவர் உப்பிலியபுரம் பகுதியில் அஜந்தா ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை என உப்பிலிபுரம் காவல் நிலையத்தில் இவரது மனைவி அனிதா புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று துறையூர் அருகே உள்ள சிறுநத்தம் பகுதியில் பாலத்தின் அடியில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து துறையூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்ததில் கொப்பம்பட்டி பகுதி சேர்ந்த செந்தில் என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து சடலத்தை துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது அவர் கழுத்தில் கயிற்றால் இருக்கப்பட்ட அடையாளங்களும், உடலில் சிறு சிறு காயங்களும் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து துறையூர் காவல்துறையினர் செந்தில் மரணத்தை சந்தேக மரணமாக சந்தேகம் மரணமாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் லால்குடி தாலுக்கா சிறுகனூர் அருகே உள்ள ரெட்டி மாங்குடி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் செந்தில்குமாரை கொலை செய்து சடலத்தை சிறுநத்தம் பாலத்தில் வீசியதை ஒப்புக்கொண்டான். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *