Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இணைய வேண்டும் என மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் வரை 573 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது தற்போது வரை வராமல் உள்ளது. 

இது தொடர்பாக திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியின் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். 60 முதல் 40% வரை கல்விக்கான நிதியை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி விடக்கூடாது பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயம் இதில் நீங்கள் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

நான் தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அப்படியே உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை இது குறித்து கடிதம் எழுதி இருக்கிறோம் அதற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பிகள் வலியுறுத்தினர் கூட்டத்தொடர் முடிந்து தற்போது எவ்வளவு நாட்கள் ஆகியும் நிதி வராமல் இருப்பது தொடர்பாக நேற்று முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக கூட மத்திய அரசை வலியுறுத்தி விட்டுச் சென்றுள்ளார்..

573 கோடி மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வரவேண்டிய 249 கோடியும் மத்திய அரசு நிறுத்தி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் வந்தால் மட்டுமே இந்த நிதி உடனே கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்பதை மாநில அரசாணை நாங்களும் சொல்கிறோம் மத்திய அரசின் நீங்களும் சொல்கிறீர்கள் அப்படி இருக்கும் போது நிதியை வழங்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார். 

புதிய கல்வி கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் தருகிறதா என்ற கேள்விக்கு?….. நிச்சயம் உண்மைதான். பள்ளிக்கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டுமே என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்த கொள்கை அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல…

ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறோம் அதேபோன்றுதான் கல்விக்கான நிதி சுமையும் சமாளிக்க போகிறோம் என்றார். கடுமையான நிதி சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்துகளையும் இந்த அரசும் தமிழக முதலமைச்சரும் செய்வார் என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *