Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாட்டியை கொன்று முள் புதரில் வீசி சென்ற பேரன் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் வள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தனபாக்கியம் (64). இவர் கடந்த நான்காம் தேதி காணாமல் போனதாக தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்பொழுது தனபாக்கியத்தை சின்ன சேலம் ராஜலிங்கம் மகன் ஹரிஹரசுதன் (31) இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் ஹரிஹரசுதன் தனபாக்கியத்திடம் கடன் வாங்கியது தெரிய வந்தது. கடனை திருப்பி கேட்டுள்ளார் தனபாக்கியம்.

கொடுத்த பணத்தை திருப்பி கேட்கிறாய் என மனதுக்குள் நினைத்த ஹரிஹரசுதன் தனது இருசக்கர வாகனத்தில் தனபாக்கியத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த கட்டையால் தனபாக்கியத்தை தாக்கி அடித்து கொன்று அவர் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் சுமார் 4 பவுன் ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நகைகளை திருடி தனபாக்கியத்தை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் இருந்த முள்புதரில் வீசி சென்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பேரன் சின்னசேலத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் -யை கைது செய்தனர். தனது சின்ன அம்மாயை பேரனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *