Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துவாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மாங்காவனம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை மறித்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சாவையும், டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாழவந்தான் கோட்டை அசோகர் தெருவை சேர்ந்த பொன்மருது (33), மற்றும் சரவணன் (27) ஆகிய இருவர் மீது துவாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *