Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பேருந்து படியில் பயணம் செய்த மாணவன் பரிதாபம்!!

திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தில் நேற்று மாலை பயணம் செய்த லால்குடி தாலுகா திருமண மேட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாலூர் அருகே பேருந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததால் மாணவர் பேருந்தில் இருந்து கீழே விழ பின்னால் வந்த கார் மோதியதில் அவரின் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேருந்தை அஜாக்கிரதையாக இயக்கியதாக பேருந்தின் ஓட்டுநரின் மேல் வழக்கு பதிவு செய்துள்ள கொள்ளிடம் காவல்துறையினர் கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *