Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கை கால்களில் கட்டுகளுடன் சாலையில் ஆர்ப்பாட்டம்

திருச்சி திருவெறும்பூர் முதல் பெல்பூர், திருவேங்கடநகர்,  கணேசபுரம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் உய்யகொண்டான் கரைச்சாலை   நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தரமற்ற முறையில் போடப்பட்டதால் ஆறு மாதங்களுக்குள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாகவும்

 இதில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன அப்படி வந்து செல்லும் வாகனங்கள் பல விபத்துக்குள்ளாகி பொதுமக்கள் பலருக்கு கை கால் முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் அரசு கவனத்தில் எடுத்து இந்த சாலையை உடனடியாக புதுப்பித்து தரமான முறையில் சாலையை அமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி

 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட 50 மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் சிலர் கை கால்களில் அடிபட்டது போன்று கட்டுகள் போட்டும் சாலையில் நாத்து நட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *