Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – Carbine பிரிவில் மத்திய மண்டலம் முதல் இடம்

மாநில அளவிலான காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியானது சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி தளத்தில் (26.09.2024) முதல் (28.09.2024) வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளாக நடைபெற்றது.

மாநில அளவில் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். அதில் ஆண்கள் பரிவில் 250 போட்டியாளர்களும், பெண்கள் பிரிவில் 200 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். மத்திய மண்டலத்திலிருந்து ஆண்கள் பரிவில் 27 போட்டியாளர்களும், பெண்கள் பிரிவில் 17 போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் மத்திய மண்டலம் இரண்டாம் இடத்தையும், ஆண்கள் Carbine பிரிவில் முதல் இடத்தையும், Revolver பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இப்போட்டியில் கலந்து கொண்ட மத்திய மண்டல காவல்துறை அணியினர் சிறப்பாக செயலாற்றி முருகானந்தம், சிறப்பு உதவி ஆய்வாளர்- 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி, பாலமுருகன், தலைமை காவலர் 1 தங்கம், ரஞ்சித், முதல்நிலை காவலர் 1 தங்கம், தினேஷ்,

முதல்நிலை காவலர் 1 வெண்கலம், சுந்தரலிங்கம், முதல்நிலை காவலர் – 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி, திலீபன், காவலர் 3 தங்கம், சிவசக்திகுமார். காவலர் 1 வெள்ளி, செல்வி. சோயியா லாரன்ஸ், பெண் காவலர் 1 தங்கம். 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் மற்றும் சங்கீதா, பெண் காவலர் 1 வெள்ளி ஆக மொத்தம் 8 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கமும் மற்றும் 3 கேடயமும் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் மத்திய மண்டல காவல்துறைக்கு பெருமை சேர்த்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *