Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

லாரி மோதி அமைச்சர் கார் சேதம் – திருச்சியில் பரபரப்பு!!

Advertisement

திருச்சி சோமரசம்பேட்டை அருகே அமைச்சர் வளர்மதியின் கார் மீது லாரி மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறையில் அதிமுக புறநகர் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருமான வளர்மதி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான காவல்துறையின் பாதுகாப்புடன் அரசு காரில் கூட்டத்திற்கு சென்றுள்ளார். பின் காரை விட்டு இறங்கி பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்தார். இந்நிலையில் வழியாக இரண்டு கொண்டிருந்த லாரி ஒன்று அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் காரின் முன்புற பகுதி சேதமானது. 

காரில் இருந்த ஓட்டுனர் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் கார் மீது லாரி மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *