Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திறக்கப்பட்டது மல்டிலெவல் வாகன பார்க்கிங் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருச்சி மாநகரில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் மேல புலிவார்ட் பகுதியில் நான்கு அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டிருக்கும் மல்டிலெவல் வாகன பார்க்கிங் இன்று திறக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் வேளையில் திறக்கப்பட்டுள்ள இந்த வாகன பார்க்கிங் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வருகை தரும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WB சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த பார்க்கிங் வசதி திருச்சியின் முதல் மல்டிலெவல் வாகன நிறுத்த வசதியாகும். நான்கு மாடியில் கார் மற்றும் டூவீலர் ஆகியவற்றை பார்க் செய்வதற்கு ஏற்ற அணைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திற்கும் வாகனத்திற்கு டோக்கன் கொடுக்க, வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்தி வைப்பதற்கு என மாநகராட்சியில் இருந்து ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த பார்க்கிங்ல் இரு சக்கர வாகனங்களுக்கு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் 15 கட்டணமும், கார்களுக்கு ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் 50 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேவையான வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

விழாக்கால கூட்டநெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு தெப்பக்குளம், சிங்காரத்தோப்பு, பெரியகடைவீதி போன்ற இடங்களுக்கு வாகனத்தை பாதுகாப்பாக விட்டுவிட்டு அணுகவும் இந்த பார்க்கிங் உதவியாக இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *