திருச்சி மாநகரம் கீழச் சிந்தாமணி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திகேயன் (14). இவர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று மாலை கீழச் சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது.
அவர் அணிந்திருந்த உடைகள் காவிரி ஆற்றின் கரையில் அவிழ்த்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் தண்ணீர் மாயமாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை தேடும்பணியில் திருச்சி தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி கோட்டை போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments