Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தீபாவளி போனஸ் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாநகரில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் ஒரு மாத கால ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வேதா என்ற நிறுவனத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வேதா நிறுவனம் போனஸ் வழங்க வேண்டும் எனவும், அதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை முதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. போராட்டத்தை தொடங்கிய நிலையில் தற்போது வரை பேச்சுவார்த்தை கூட நடத்தப்படாத காரணத்தினால் இரவு முழுவதும் நீடித்த போராட்டம் காத்திருப்பு போராட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *