திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஆசியா விமானத்தில் வருகை தந்த விமான பயணிகளை வழக்கம்போல மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது விமான பயணி ஒருவர் தனது உடைமைகளின் தங்கச் செயின், தங்க வளையல், மோதிரம் உள்ளிட்ட 292 கிராம் மதிப்புடைய தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்து விமான பயணியிடம் மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்திவரப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 21.43 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments