Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே இடி தாக்கியதில் 12ம் வகுப்பு சிறுவன் பலி

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் திவாகர் (17) அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கூலி தொழிலாளியான தங்கராசு தனது மகன் திவாகருடன் பெரமூர் பகுதியில் உள்ள கோரை வயலில் கோரை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென இனிமையாக தான் மழை பெய்தது. இதில் இடி தாக்கப்பட்டதில் சிறுவன் திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்கராசு உடலில் பலத்த காயமடைந்தார்.

இதுக்குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முசிறி இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *