Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

துணைத்தலைவராக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பேற்பு

ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக அமைச்சர் கே.என்.நேரு பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருந்திரளணி தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளனி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோரும் உயர் காவல் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *