Thursday, October 2, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

AITUC, CITU வேட்பு மனு தாக்கல்

சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனை குழு தேர்தல் திருச்சி மாநகராட்சி சார்பில் வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் AITUC, CITU மனிதநேய வர்த்தக சங்கம் தலா இரண்டு இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு இன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

AlTUC சார்பில் பொது பிரிவிற்கு மாவட்ட செயலாளர் A.அன்சர் தின், பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்கு S.ரெங்கசாமி என்கிற சிவாவும், சிஐடியு சார்பில் பெண்கள் பிரிவில் S.செல்வியும் உடல் ஊனமுற்றோர் பிரிவில் கணேசனும், மனிதநேய வர்த்தக சங்கம் சார்பில் சிறுபான்மை பிரிவில் A.அஷ்ரப் அலியும், தலித் பிரிவில் லலிதாவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கலின் போது ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ், சிஐடியூ மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கராஜன் மற்றும் AITUC மாவட்ட தரைக் கடை வியாபாரிகள், சிஐடியூ மாவட்ட தரைக்கடை வியாபாரிகள் மற்றும் மனித மனிதநேய வர்த்தக சங்க மாவட்ட தரைக் கடை வியாபாரிகள் தோழர் உள்ளிட்ட பெரும் திரளான தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *