தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க திருச்சி விமான நிலையத்திற்கு நாளை (14.11.2024) மாலை சுமார் 6:30 மணியளவில் வருகை தரவுள்ளார்.
இதனால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (14.11.2024) முதல் தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
மேலும் (15.11.2024) அன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து சென்னை செல்லவுள்ளதால் மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது.
எனவே நாளை (14.11.2024) முதல் (15.11.2024) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments