திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் குடிநீர் குழாய் குடமுருட்டி அருகே உடைப்பு ஏற்பட்டதின் காரணமாக புகழ் நகர், பாரி நகர், எல்லக்குடி, சந்தோஷ் நகர், ஆலத்தூர், கணேஷ் நகர் மற்றும் காவேரி நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் (16.11.2024) மற்றும் (17.11.2014) ஆகிய இரண்டு நாட்கள் இருக்காது.
நாளை மறுநாள் (18.11.2024) அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments