Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மக்காச்சோளம் பயிரில் படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிர் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 30 நாள் முதல் 60 நாள் பயிராக உள்ள நிலையில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

படைப்புழு தாக்குதல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி கூறியதாவது. படைப்புழுவை கட்டுப்படுத்த விதைத்த 30-40 நாட்களில் மக்காச்சோளம் பயிரில் இமாமெக்டின் பென்சோவேட் 5% SG மருந்தினை ஏக்கருக்கு 80 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

அல்லது நொவலூரான் 10% EC மருந்தினை ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேலும் விதைப்பு செய்த 60ம் நாளில் ஸ்பின்டோரம் 11.7% SC மருந்தினை ஒரு ஏக்கருக்கு 100 மில்லி என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இத்துடன் இனக்கவர்ச்சி பொறியினை ஒரு ஏக்கருக்கு 5 எண்கள் என்ற அளவில் வயலில் வைத்து படைப்புழுவின் ஆண் அந்துபூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

இதன் மூலம் படைப்புழுவின் இனப்பெருக்கம் பெருமளவு குறையும் என்று கூறினார். மேலும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர்கள் டாக்டர் ராஜபாபு மற்றும் டாக்டர் ஈஸ்வரன் மண்ணச்சநல்லூர் வட்டாரம் திருப்பட்டூர் கிராமத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டுள்ள மக்காச்சோளம் பயிரினை பார்வையிட்டு கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

தற்சமயம் அவ்வப்போது மழை பெய்வதுடன் குளிர்ச்சியான நிலை உள்ளதால் சரியான நேரத்தில் பூச்சி மருந்துகளை தெளித்து மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துமாறு தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *