Thursday, October 2, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் இளைஞர் தற்கொலை – போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சோழமாநகரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் ஆகாஷ் (24). இவர் சிஎன்சி ஆப்பரேட்டராக ஓசூர் மற்றும் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே ஆகாஷ் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தபோது ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக திருச்சிக்கு வந்த அவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆகாஷ் தனது தாயாரின் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடைக்குச் சென்றிருந்த அவரது தாயார் மீண்டும் வீட்டிற்கு வந்த பார்த்தபோது தனது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆகாஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் விவகாரத்தால் ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ?என விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *