Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தடகள போட்டிகளில் மத்திய மண்டலத்தை சேர்ந்த வெற்றி பெற்ற காவலர்களுக்கு ஐஜி பாராட்டு

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரியம் காவலர் சுந்தர், Triple Jump போட்டியில் கலந்து கொண்டு 7-ம் இடத்தை பெற்றுள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கமும், ரூபாய் முன்று இலட்சம் ரொக்க பரிசும் வென்றுள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு வெண்கல பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டியின் போது பரிசு தொகையானது அளிக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய காவல் துறையினருக்கான தடகள போட்டிகளில் திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் அரவிந்த் 110 Meters Hurdles போட்டியில் பங்கு பெற்று 5ஆம் இடத்தையும், அரியலூர் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் குழந்தைவேலு குண்டு எறிதல் போட்டியில் 12வது இடமும்,

திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் தர்ஷன் ஈட்டி எறிதல் போட்டியில் 17வது இடமும் பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற காவலர்களுக்கு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *