Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தாய் இறந்த சோகத்தில் சகோதரர்கள் எடுத்த விபரீத முடிவு – திருச்சி அருகே சோகம்!!

தாய் இறந்த சோகத்தில், சகோதரர்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதில் அண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே நாகமங்கலம் இந்திராநகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் செல்லம்மாள். இவர் மகன்கள் ராமசாமி (எ) குட்டி, சதீஷ் உடன் வசித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு செல்லம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த சோகத்தில் மூழ்கியிருந்த மூத்த மகன் ராமசாமி (எ) குட்டி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது தம்பி அண்ணனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். முயற்சி பலனளிக்கவில்லை.

தொடர்ந்து அவரது உடலை கீழே இறக்கி விட்டு அதே சேலையில் தம்பி சதீஷ் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார், இதையடுத்து வீட்டின் உள்ளே சென்ற சதீஷ், நீண்ட நேரமாக வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை தட்டியுள்ளனர். திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரும் தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. உடனடியாக அவரை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய் இறந்த துக்கத்தில் அண்ணனும், அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் தூக்கு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து திருச்சி மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *