Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் பரபரப்பு‌ – நில அதிர்வா மக்கள் அச்சம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோவில்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அப்போது வீட்டின் ஓடுகள், வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் ஐன்னல் கதவுகள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் மணப்பாறை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பகுதியில் கடந்த 02 ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் மத்திய பயிற்சி கல்லூரி (Central Training College, CRPF, Coimbatore Group Unit) கோயம்புத்தூர் குருப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த வெடிச்சத்தம் இங்கிருந்து வந்ததா என சந்தேகம் எழுந்த நிலையில், வீரப்பூர் அருகே உள்ள அணியாப்பூர் இரட்டைக் கரடு என்ற பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும் இங்கு அவ்வப்போது வெடிவைத்து பாறைகள் உடைக்கப்படும்போது பயங்கர சத்தம் ஏற்படுவதாகவும் இன்றும் அப்பகுதியில் தான் அதிக சத்தம் கேட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.

இந்த திடீர் வெடிச்சத்தம் கல்குவாரியிலிருந்து வந்ததா அல்லது துப்பாக்கி சூடும் பயிற்சி மையத்திலிருந்து வந்ததா அல்லது நில அதிர்வா எனவும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் அச்சத்தை போக்க விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் சத்தம் மணப்பாறை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *