Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மருத்துவ விதிமுறைக்கு அப்பால் செயல்படும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் ஆய்வுமேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியர்ககளின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர்….. 8637 பேலட் யூனிட்டுகளும், 3449 கண்ட்ரோல் யூனிட்டும், 3990 விவிபேட் இயந்திரங்களும் உள்ளது, திருச்சி மாவட்டத்தில் 6000 ஹெக்டர் பரப்பளவில் மழை நீர் தேங்கியுள்ளதாக கணக்கிடக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்த பிறகு முழுபாதிப்பு விவரம் தெரியவரும்.

மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் அதிக இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன் கண்காணிப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அருகில் உள்ள இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு மழைவந்தாலும் மாவட்ட நிர்வாகம் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

மருத்துவ விதிமுறைக்கு அப்பால் செயல்படுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைவது மருத்துவ விதிமீறல், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராமில் தற்போது இதுபோன்ற வீடியோ போடுவது அதிகரித்துள்ளது. முழுக்க முழுக்க உடல்நலத்தை பாதிக்கக்கூடியது. இந்த மோசடியில் இளைஞர்கள் விழவேண்டாம். இதில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மலை பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு 20 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாகவும், குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய தயாராக உள்ளனர். அதனால் எவ்வளவு மழை வந்தாலும் திருச்சி தயாராக உள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *