Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம் – ஜனவரி 10 பரமபத வாசல் திறப்பு.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் ஆகும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்கியது. 

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை (31 ஆம் தேதி) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7:45 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8:30 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைவார். காலை 8:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிர பந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். 

இரவு 7:00 மணிக்கு அர்ஜுன மண் டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.ப கல் பத்தின் முதல் நாளில் இருந்து மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும் இதே போல் பகல் பத்து திருவிழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 

பகல்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான வருகிற ஜனவரி 9 ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். ஜனவரி 10 ஆம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 4:15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5:15 மணிக்கு பரம பதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். 

அன்றைய தினம் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். பின்னர் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 16 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ராப்பத்து 8 ஆம் திருநாளான 17ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 18 ஆம் தேதி வழக்கம்போல் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும், 19 ஆம் தேதி காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSf

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *