Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டம் – மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

2025-ஆம் வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு (31.12.2024)-ம் தேதி இரவு திருச்சி மாநகரில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க விரிவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு செய்யாமல் அமைதியான முறையில் புத்தாண்டினை கொண்டாடுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) மாநகரில் அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் காவல் ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பொது இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட 350 போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக காவல் ஆளினர்கள் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

2) பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கேலி கிண்டல் செய்தாலும், இடையூறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

3) பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது அருந்துதல், கேக் வெட்டுதல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

3) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை சார்பில் பலத்த ஏற்பாடுகள் செய்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

4) புத்தாண்டன்று பொதுமக்களுக்கு இடையூறாக பைக் ரேஸில் ஈடுபட்டாலோ அல்லது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *