Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 129 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேசிய பண்டிகை விடுமுறை தினமான குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 170 நிறுவனங்களில் சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் டாக்டர் அதுல்ஆனந்த்,

திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்வியநாதன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி ஆகியோர் அறிவுரையின்படி திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் தேசிய பண்டிகை விடுமுறைநாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 129 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.தங்கராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *