Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை

திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சாா்பில், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநா்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, திருச்சி மாவட்டத்தில் மண்டல அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் ஜனவரி. 31-ஆம் தேதி காலை 10:00 மணி அளவில் திருச்சி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது.

இந்த சோ்க்கை முகாமில் இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவா்களை மற்றும் (2021-22), (2022-23), (2023-24) ஆகிய வருடங்களில் தோ்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியாா் ஐ.டி.ஐ பயின்றவா்கள், 8ம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,12 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (இருபாலரும்) மற்றும் பட்டம், பட்டயப் படிப்பு முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சியின்போது, உதவித் தொகையாக மாதம் ரூ. 7,700 முதல் ரூ. 12,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும்.

தொழிற்பழகுநா் சட்டத்தின் படி இந்த நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். எனவே, மாணவா்கள் இந்த சோ்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கூடுதல், விவரங்களை அறிய திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 94436-44967, 0431-2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *