Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கல்லூரி பேராசிரியரின் மகன் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என இரண்டு பேர் கஞ்சா வழக்கில் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நகர் பகுதியில் வீடுகளில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக துவாக்குடி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துவாக்குடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் அதிரடியாக துவாக்குடி பெல் நகர் பகுதியில் உள்ள ஒருவீட்டை சோதனையிட்ட போது விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அங்கிருந்தவனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது தான் என் ஐ டி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ரோஷன் ( 26 ) என்றும், தனது தாய் என்.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த பகுதியில் வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் கஞ்சா விற்பதையும் ரோஷன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

அந்த வீட்டில் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த வீட்டில் இருந்தவனை பிடித்து விசாரணை நடத்தியதில், பீகார் மாநிலம் ஹாஜி பஜார் பகுதியை சேர்ந்த பிரஜிரா பிரசாத் மகன் அசின் பாபாவ் (27 ) என்பது தெரிய வந்தது. இருவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்ததோடு ஐபோன், வெல்டிங் மிஷின், டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். என் ஐ டி கல்லூரி பேராசிரியரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யபட்டிருக்கும் சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *