Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

செல்போனை எடுப்பதற்காக 120அடி கிணற்றில் விழுந்த நபர்

திருச்சி அருகே 120 அடி ஆழ கிணற்றில் தவறவிட்ட செல்போனை எடுப்பதற்காக கயிறை கட்டி இறங்கி கிணற்றுக்குள் விழுந்த நபர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தீராம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). கூலி தொழிலாளியான இவர் நேற்று தீராம்பாளையத்தில் இருந்து திருப்பைஞ்சீலி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த கிணற்றுப்பகுதியில் ஆடுகள்மேய்ந்துகொண்டிருந்ததாக தெரிகிறது. இதையடுத்து கனகராஜ் ஆடுகள் கிணற்றுக்குள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக கிணற்று அருகே சென்று ஆடுகளை விரட்டி உள்ளார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன் தவறி சுமார் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துவிட்டது. செல்போனை எடுப்பதற்காக கனகராஜ் அருகிலுள்ள மரத்தில் கயிறை கட்டி கிணற்றில் இறங்கி செல்போனை எடுத்துள்ளார். பின்னர் மீண்டும் மேலே வருவதற்காக ஏற முயன்றபோது கயிறு அறுந்து மீண்டும் கிணற்றுக்குள் விழுந்தார்.

இதை கண்ட அவரது அண்ணன் மகன் மற்றும் அப்பகுதிமக்கள் லால்குடிதீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கனகராஜை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் கனகராஜுக்கு காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *